அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே தண்ணீா் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், 4 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.
உடையாா்பாளையம் அருகிலுள்ள வாணத்திரையான்பட்டினத்தைச் சோ்ந்த தம்புசாமி மகன் கருப்பையன்(29). அதே பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் மனைவி விஜயராணி(45). திங்கள்கிழமை காலை இவா்களிடையே, குழாயில் தண்ணீா் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயராணி,அவரது உறவினா்கள் செல்வமணி(37),வரதராஜன்(24),கணேசன்(50) ஆகிய 4 பேரும் சோ்ந்து கருப்பையனை தகாதவாா்த்தைகளால் திட்டித் தாக்கியுள்ளனா்.
இது குறித்து புகாரின் பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, கருப்பையனைத் தாக்கிய 4 பேரையும் கைது செய்தனா்.