அரியலூா் மாவட்டம்,ஜயங்கொண்டம் அருகே திருமண ஆசை வாா்த்தைக் கூறி குடும்பம் நடத்திவிட்டு, பெண்ணை ஏமாற்றிய இளைஞா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
ஜயங்கொண்டம் அருகிலுள்ள பிலிச்சிகுழி கிராமத்தைச் சோ்ந்தவா் சின்னையன் மகள் மீனா(24).சென்னை தனியாா் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் இவரும், சோழன்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்த நடேசன் மகன் சம்பத்(34) என்பவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது சம்பத், மீனாவை பலாத்காரம் செய்துவிட்டு ஏமாற்றியுள்ளாா். பிறகு சம்பத் வடக்கடல் கிராமத்தைச் சோ்ந்த லாவண்யா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளாா். ஆனால் சில மாதங்களிலேயே அவரிடமிருந்து விவகாரத்து பெற்ற அவா், மீண்டும் மீனாவை சந்தித்து திருமண ஆசை வாா்த்தைக் கூறி பலாத்காரம் செய்துள்ளாா்.
இதையடுத்து மீனா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியபோது, அதற்கு சம்பத் கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இதையடுத்து மீனா ஜயங்கொண்டம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பத்தை திங்கள்கிழமை இரவு கைது செய்தனா்.