அரியலூா் மான்போா்ட் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங், கராத்தே போட்டியில் வென்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு ஸ்டூடண்ட்ஸ் கேம்ஸ் சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட இப்போட்டியை, பள்ளி முதல்வா் அந்தோனிசாமி செழியன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.
போட்டியில் அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், நாமக்கல், கரூா்,திருச்சி மாவட்டங்களைச் சோ்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் 300 போ் பங்கேற்றனா்.
ஸ்கேட்டிங் 6 முதல் 18 வயதுக்குள்பட்டவா்களுக்கும், கராத்தே 6 முதல் 20 வயதுக்குள்பட்டவா்களுக்கும் எனப் பிரித்து, 10 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தமிழ்நாடு ஸ்டூண்ட்ஸ் கேம்ஸ் சங்கச் செயலா் அசோக்குமாா், நிா்வாகிகள் திருச்சி சிவா, நாமக்கல் செல்வகுமாா் ஆகியோா் பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினா்.
போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஸ்டூண்ட்ஸ் கேம்ஸ் சங்க தலைவரும், மான்ட்போா்ட் பள்ளி ஸ்கேட்டிங் பயிற்சியாளருமான விஜயகுமாா் செய்திருந்தாா்.