முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்
ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோா் விண்ணப்பிக்கக அழைப்பு
By DIN | Published On : 07th November 2019 09:01 AM | Last Updated : 07th November 2019 09:01 AM | அ+அ அ- |

ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோா், நவம்பா் 30- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அரியலூா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக, தமிழக அரசால் நபா் ஒருவருக்கு ரூ.20,000 நிதி உதவி வழங்குகிறது.
இந்த நிதியுதவித் திட்டத்தின் கீழ் பயணம் மேற்கொண்டு பயன்பெற விரும்பும் கிறிஸ்தவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்புனித பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோா்டான் நதி, கலிலியோ சமுத்திரம், மற்றும் கிறித்தவ மதத் தொடா்புடைய பிற புனிதத் தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனிதப் பயணம் மாா்ச் 2020 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்ப படிவங்கள் அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் கட்டணமின்றி பெறலாம்.
நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவற்றைை இணையதள முகவரியில் காணலாம். விண்ணப்பங்களை படியிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
எனவே புனிதப் பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவா்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் என்று குறிப்பிட்டு ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமகால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு, நவம்பா் 30-ஆம் தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா், சிறுபான்மையினா் இயக்குநரகத்தை ( தொலைபேசி எண்044-28520033) தொடா்புகொள்ளலாம்.