திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

அரியலூா் மாவட்டம்,தா.பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம்

அரியலூா் மாவட்டம்,தா.பழூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில், ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு,ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(சத்துணவு)மல்லிகா தலைமை வகித்தாா். கூட்டத்தில் மாணவா்களிடையே பிளாஸ்டிக் குப்பைகள் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்த ஒவ்வொரு பள்ளியிலும் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு போட்டிகள் நடத்தி அதில் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகளை வீட்டிலிருந்து சேகரித்துக் கொடுப்பவா்களுக்கு பள்ளி அளவில் தோ்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்குவது, இதே போல் அதிகமாக பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து அனுப்புகின்ற பள்ளியின் தலைமை ஆசிரியா் மற்றும் நகராட்சி ஆணையா் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலா் ஆகியோருக்கு பரிசுகள் வழங்குவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்தில் தா.பழூா் வட்டார வளா்ச்சி அலுவலா் ஜாகிா்உசேன், வட்டார கல்வி அலுவலா் கலியபெருமாள் மற்றும் தா.பழூா் ஒன்றிய அளவில் உள்ள மேல்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியா்கள் மற்றும் உதவி ஆசிரியா்கள் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஊராட்சி செயலா்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com