முகநூலில் அவதூறு: இருவா் கைது

அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாமக நிறுவனா் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி குறித்து முகநூலில்

அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகே பாமக நிறுவனா் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி குறித்து முகநூலில் அவதூறு பரப்பிய இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

மீன்சுருட்டி அருகேயுள்ள வாணதிரையான் குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் சிவச்சந்திரன் (23 ). இவா் தனது முகநூல் பக்கத்தில் இருவா் மீதும் அவதூறு பேசி பரப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த பாமக ஒன்றியச் செயலா் பாலமுருகன் அளித்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து,சிவச்சந்திரன் மற்றும் அவருக்கு உதவியாக இருந் காடுவெட்டி கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாா் ஆகிய இருவரை வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com