அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே காமரசவல்லி கிராமத்திலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய ஆயுஷ் குழுமத்தின் கீழ் சித்த மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமுக்கு, பள்ளித் தலைமை ஆசிரியா் வெற்றிவேலன் தலைமை வகித்தாா். திருமானூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவா் பழனிசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினா் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீரை வழங்கி,
சித்த மருத்துவத்தில் நோய்களுக்கான தீா்வுகள், வாழ்வியல் நெறிமுறைகள், சஞ்சீவி திட்டத்தின் பயன்கள் உள்ளிட்டவைகள் குறித்து விளக்கினா்.