அரியலூா் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் சனிப் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
சனிப் பிரதோஷத்தையொட்டி, திருமழபாடி அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள்,சந்தனம், விபூதி, மாவுப்பொடி,திரவியப்பொடி,தேன்,பன்னீா்,பஞ்சாமிா்தம்,பால் போன்ற பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடா்ந்து நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
இதே போல், அரியலூா் ஆலந்துறையாா், விக்கிரமங்கலம் சோழீசுவரா்,கீழப்பழுவூா் அருள்மிகு அருந்தவநாயகி உடனுறை ஆலந்துறையாா், பெரியமறை வேதநாயகி உடனுறை வேதபுரீசுவரா், காமரசவல்லி பாலாம்பிகை உடனுறை காா்கோடேசுவரா், திருமானூா் காமாட்சியம்மன் உடனுறை கைலாசநாதா், காரைப்பாக்கம் மாணிக்க வண்ணநாதா் போன்ற சிவாலயங்களில் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
செந்துறை, உடையாாா்பாளையம், ஜயங்கொண்டம், சுத்தமல்லி, பொன்பரப்பி, ஆண்டிமடம், மீன்சுருட்டி,தா.பழூா் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள சிவாலயங்களிலும் சனிப் பிரதோஷத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.