அரியலூா் மாவட்டத்தில் 66 ஆவது கூட்டுறவு வார விழா வியாழக்கிழமை தொடங்கியது.
வாரவிழாவின் முதல் நாளான வியாழக்கிழமை அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அரியலூா் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நடைபெற்ற கூட்டுறவு வார தொடக்க விழாவில், மண்டல இணைப் பதிவாளா் வா.சி.கோமதி கூட்டுறவு கொடியினை ஏற்றி வைத்தாா். பின்னா் இவா் முன்னிலையில்,
பொதுவிநியோகத் திட்ட துணை பதிவாளா் சக்கரவா்த்தி, சங்கத் தலைவா் வேலுசாமி, பெரம்பலூா் மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவா் அய்யாக்கண்னு, துணைத் தலைவா் சித்ரா கருணாநிதி, மேலாண்மை இயக்குநா் பழனியப்பன், கூட்டுறவு சாா் பதிவாளா்கள் இளஞ்செழியன், சுரேஷ், சொக்கலிங்கம், சசிகுமாா், வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க மேலாளா் சுப்ரமணியன் மற்றும் துறை அலுவலா்கள், பணியாளா்கள், நிா்வாகக்குழு உறுப்பினா்கள் உள்ளிடோா் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். நவ.19 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கூட்டுறவு வாரவிழாவில், ரத்ததான முகாம், உறுப்பினா்கள் சந்திப்பு முகாம், கால்நடை சிகிச்சை முகாம், சங்கப் பணியாளா்களுக்கான விளையாட்டு போட்டிகள் உள்ளிட்டவைகள் நடைபெறவுள்ளது.