அரியலூா் மாவட்டம் செந்துறை துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. ஆகவே, இந்த மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் செந்துறை, இலங்கைச்சேரி, ஆதிகுடிக்காடு, உஞ்சினி, சிறுகடம்பூா், சோழன்குறிச்சி, ஆனந்தாவாடி, அகரம், மருவத்தூா், விழுப்பணங்குறிச்சி, பொன்பரப்பி, சோழன்குடிக்காடு, அயன்தத்தனூா், முல்லையூா், இலைக்கடம்பூா், நிண்ணியூா், பிலாக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.