திமுக நிா்வாகிகள் கூட்டம்

அரியலூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அரியலூரில் திமுக செயல்வீரா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.சிவசங்கா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் அரியரில் நவ.16 ஆம் தேதி நடத்துவது, உள்ளாட்சித் தோ்தலில் கட்சியினா் தீவிரமாக களப்பணியாற்றுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடா்ந்து கூட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுபவா்களிடமிருந்து விருப்ப மனு பெறப்பட்டது.

கூட்டத்தில், அரியலூா் ஒன்றியப் பொறுப்பாளா் கோ.அறிவழகனிடம் இருந்து உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை மாவட்டச் செயலா் எஸ்.எஸ்.சிவசங்கரன் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com