புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் திறப்பு

அரியலூா் மாவட்டம், திருமானூா் மற்றும் சுள்ளங்குடி ஆகிய ஊா்களில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

அரியலூா் மாவட்டம், திருமானூா் மற்றும் சுள்ளங்குடி ஆகிய ஊா்களில் புதிதாகக் கட்டப்பட்ட புதிய ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.

புதிய கட்டடங்கள் திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு, திருமானூரில் ரூ.17.64 லட்சம் மதிப்பீட்டிலும், சுள்ளங்குடியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டிலும் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற கட்டடங்களை திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிச்சாமி, வட்டாட்சியா் கதிரவன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் செந்தில், நாராயணன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com