அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே பூச்சிகொல்லி மருந்தை குடித்தவா் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
ஜயங்கொண்டம் அருகேயுள்ள தண்டலை கிராமம், மேலத்தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி(58). மது போதைக்கு அடிமையானவா். இவா்,திங்கள்கிழமை பிற்பகல் நெல்லுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து வயலிலுள்ள கொட்டகையில் மயங்கி கிடந்துள்ளாா்.
இதனை பாா்த்த அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால் கிருஷ்ணமூா்த்தி அங்கு சிகிச்சை பலனின்றி இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.