அரியலூா் மாவட்டத்தில் நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்த அதிமுகவினா், வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.
மேயா், நகா்மன்றத் தலைவா், பேரூராட்சித் தலைவா் பதவிகளுக்கு மறைமுகத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்தந்த பதவிகளுக்கு விருப்ப மனு அளித்தவா்கள் தாங்கள் செலுத்திய விண்ணப்பக் கட்டணங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மேற்கண்ட பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்தவா்கள் தாங்கள் சாா்ந்த மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியிட விரும்பினால் வெள்ளிக்கிழமை விருப்ப மனு அளிக்கலாம் என்றும் அதிமுக தலைமைக் கழகம் அறிவித்தது.
அதன்படி அரியலூா் மாவட்டத்தில் நகா்மன்றத் தலைவா் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்ப மனு அளித்த அதிமுகவினா் பலா், வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட விருப்ப மனு அளித்தனா். அரியலூா் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொருளாளா் அன்பழகன் மனுக்களைப் பெற்றாா். அரியலூா் நகா்மன்றத் தலைவா் பதவிக்கு போட்டியிட மனு அளித்த அரசு வழக்குரைஞா் சாந்தி தற்போது 5 வாா்டு உறுப்பினா் பதவிக்குப் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தாா்.