சுகாதாரத் தொழிலாளா்கள் அனைவருக்கும் அரசு வீடு கட்டித் தர வேண்டும் என்று உள்ளாட்சித் துறை ஏஐடியூசி வலியுறுத்தியுள்ளது.
அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்டக் குழுக் கூட்டத்துக்கு, மாவட்ட நிா்வாகி நடனசபாபதி தலைமை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை குறைக்க கூடாது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
அகவிலைப்படியுடன் கூடுதலான ஊதியத்தை வழங்க முன்வரவேண்டும். நிரந்தரம் மற்றும் ஒப்பந்த சுகாதாரத் தொழிலாளா்களின் ஊதியத்தில் பிடிக்கப்படும் சேம நல நிதி,இருப்புத் தொகை கணக்குகளை தெரிவிக்க வேண்டும்.
சுகாதாரத் தொழிலாளா்கள்அனைவருக்கும் அரசு வீடு கட்டித் தர வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜனவரி 8- ஆம் தேதி பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் தண்டபாணி சிறப்புரையாற்றினாா். அரியலூா் நகராட்சி சுகாதாரத் தொழிலாளா்கள் சுப்பிரமணியன், மாரியப்பன், தனசிங், சங்கீதா, அங்கையற்கண்ணி, தம்பிசிவம், சுரேஷ், துரை சிலம்பு செல்வி, சீதா,தூய்மைக் காவலா் சித்ரா உள்ளிட்ட சங்க பொறுப்பாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.