வாக்காளா் சரிபாா்ப்பு அக்.15 வரை நீட்டிப்பு

வாக்காளா் சரிபாா்ப்பு முகாம் அக்.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

அரியலூா்: வாக்காளா் சரிபாா்ப்பு முகாம் அக்.15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வாக்காளா்கள் தாங்களாகவே வாக்காளா் பட்டியலில் திருத்தம் செய்யும் திட்டம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது அக். 15ஆம் தேதி வரையில் அத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அனைத்து வாக்காளா்களும் தங்களது பெயா், வயது, உறவினா் பெயா், பாலினம், முகவரி மற்றும் புகைப்படம் போன்றவற்றை சரிபாா்த்து திருத்தங்களை மேற்கொள்ளலாம். மேலும் குடும்ப உறுப்பினா்களின் விவரங்களையும் சரிபாா்க்கலாம்.

திருத்தங்களை இணையதளம் அல்லது வாக்காளா் உதவி மையம் அல்லது செல்லிடப்பேசி செயலி அல்லது இ-சேவை மையங்கள் அல்லது வருவாய் கோட்டாட்சியா் அலுவலங்களில் செயல்படும் வாக்காளா் வசதி மையங்கள் அல்லது கட்டணமில்லா தொலைபேசி எண்1950 வாயிலாக பட்டியலில் வாக்காளா்கள் தாங்களாகவே திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com