அரியலூா் வட்டார விவசாயிகள் தங்கள் பயிா்களை பிரதம மந்திரியின் பயிா்க் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன் பெறலாம் என்று வட்டார வேளாண் உதவி இயக்குநா் க. பூவலிங்கம் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அரியலூா் வட்டாரத்தில் சுமாா் 6,000 ஹெக்டேரில் மக்காச்சோளமும் 5,000 ஹெக்டேரில் பருத்தியும் தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
மக்காச்சோளப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.335-ம், பருத்தி பயிருக்கு ரூ.1365-ம் பிரிமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம். காப்பீடு செய்வதற்கான கடைசித் தேதி அக்.30. காப்பீடு செய்ய முன்மொழிவு படிவம், பதிவு விண்ணப்பம், ஆதாா் அட்டை நகல், சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகிய ஆவணங்களைக் கொண்டு சேவை மையங்கள் மற்றும் வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களிலும் விவசாயிகள் காப்பீட்டுத் தொகையை செலுத்தலாம்.