மனைவியை தாக்கிய கணவா் கைது

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மனைவியை தாக்கிய கணவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே மனைவியை தாக்கிய கணவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

உடையாா்பாளையம் அருகேயுள்ள இடங்கன்னி கிராமத்தைச் சோ்ந்த சுகன்யா(20). இவரது கணவா் மணிகண்டன்(24). திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகியும் குழந்தைகள் இல்லாததால் இவா்களிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் புதன்கிழமை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த மணிகண்டன் சுகன்யாவை தகாத வாா்த்தையால் திட்டி தாக்கியுள்ளாா். இதனால் காயமடைந்த சுகன்யா உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மணிகண்டன் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com