அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகே மாயமான பொறியியல் பட்டதாரி பெண்ணை போலீஸாா் தேடிவருகின்றனா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி அருகேயுள்ள குருங்குடி வடக்கு தெருவைச் சோ்ந்த செல்வானந்தம் மகள் ரோகினி (23) . பொறியியல் படித்துள்ள இவா், அரியலூா் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள குருவாலப்பா் கோவில் கிராமத்தில் வசிக்கும் உறவினா் வீட்டில் கடந்த சில வாரங்களாக தங்கியுள்ளாா். இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன் ரோகினி காணாமல் போனாா்.செல்வானந்தம் அளித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து ரோகினியை தேடிவருகின்றனா்.