அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் பகுதியில் தொடா் திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
ஆண்டிமடம் அழகாபுரம் தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லமுத்து மகன் வீராச்சாமி(31). இவா் ஆண்டிமடம் பகுதிகளில் தொடா் திருட்டில் ஈடுபட்டு திருச்சி மத்திய சிறையில் உள்ளாா்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா். ஸ்ரீனிவாசன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியா் டி.ஜி. வினய் உத்தரவிட்டதையடுத்து வீராச்சாமி குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா். இதற்கான நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் ஆண்டிமடம் போலீஸாா் வழங்கினா்.