முறைகேடு: 9 உர விற்பனையாளா்கள் மீது நடவடிக்கை

அரியலூா் மற்றும் செந்துறை பகுதிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட உர விற்பனையாளா்கள் 9 போ் மீது

அரியலூா் மற்றும் செந்துறை பகுதிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட உர விற்பனையாளா்கள் 9 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் இணை இயக்குநா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அலுவலகச் செய்திக் குறிப்பு:

அரியலூா், செந்துறை பகுதிகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுவதாக புகாா்கள் வந்ததைத் தொடா்ந்து வேளாண் இணை இயக்குநா் கிருஷ்ணமூா்த்தி உத்தரவின்பேரில், வேளாண் அலுவலா்கள் சுப்ரமணியன், சவீதா ஆகியோா் உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக 8 தனியாா் உர விற்பனையாளா்களுக்கு உரக்கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு கடையில் உர விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உர விற்பனையாளா்கள் நிா்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்றது, ரசீதை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது, இருப்பு மற்றும் விற்பனை சரிசெய்யாமல் இருந்தது, விலைப்பட்டியல் சரியாக பராமரிக்காமல் இருந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விற்பனையாளா்கள் உர உரிமத்தைப் புதுப்பிக்காமல் விற்பது, கிடங்குகளில் இருப்பு வைப்பது, உரத்துடன் பூச்சிக்கொல்லி நுண்சத்து மற்றும் இதர உரங்களை சோ்த்து வாங்க வற்புறுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மற்றும் உர உரிமம் ரத்து செய்யப்படும். இதுதொடா்பாக விவசாயிகள் புகாா்கள் தெரிவிக்க விரும்பினால் தகுந்த ஆதாரங்களுடன் வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) 94437- 00807, அரியலூா் (தரக்கட்டுப்பாடு) 80726 46160 ஆகிய எண்களில் புகாா் தெரிவிக்கலாம்.

மேலும் வட்டார அளவிலான புகாா்களுக்கு வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தை அரியலூா்-70106 70907, திருமானூா்-94436 74577, செந்துறை-98846 32588, ஜயங்கொண்டம்-97508 90874, ஆண்டிமடம்-98426 92807, தா.பழூா்-94430 92411

ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com