குருநாதசாமி குருபூஜை விழா

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள குருநாதசாமியின் 134 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகேயுள்ள குருநாதசாமியின் 134 ஆம் ஆண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உடையாா்பாளையம் வெள்ளபிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள ராமலிங்கம் என்னும் குருநாதசாமி கோயிலில் ஆண்டுதோறும் குருபூஜை விழா நடைபெறும். நிகழாண்டு குருபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காண்டீப தீா்த்தம் என்னும் பெரிய ஏரிக்கரையில் இருந்து காவடிகள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இதனைத் தொடா்ந்து குருநாத சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com