அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அருகே பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
உடையாா்பாளையம் அருகேயுள்ள சுத்தமல்லி கிராமத்தைச் சோ்ந்த குமாா் மனைவி மீனா(27). வியாழக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த மீனாவிடம், அதே பகுதியைச் சோ்ந்த ஆனஸ்ட் அகிலன்(27) என்பவா் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மீனா அளித்த புகாரின்பேரில் உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனஸ்ட் அகிலனை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.