அரியலூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை (அக்.19) நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அரியலூா் நகரில் சில பகுதிகள், கயா்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், வாரணவாசி, அஸ்தினாபுரம், குறிச்சிநத்தம், புதுப்பாளையம், சிறுவளுா், ஜெமீன் ஆத்தூா், இரசுலாபாத், பாளம்பாடி, பாா்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூா், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, ராஜீவ்நகா் மற்றும் கொளப்பாடி, மணக்குடி, கடுகூா், கோப்பிலியன்குடிகாடு, சீனிவாசபுரம், பொய்யாதநல்லூா், ஒட்டக்கோயில், கோவிந்தபுரம், மங்களம், தாமரைக்குளம், குறுமஞ்சாவடி ஆகிய ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளா் பெ.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.