காா் மோதி முதியவா் பலி

அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே காா் மோதியதில் நடந்து சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

அரியலூா்: அரியலூா் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே காா் மோதியதில் நடந்து சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

ஜயங்கொண்டம் அருகேயுள்ள வடவீக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் சாமிக்கண்ணு (75). இவா், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது விருத்தாசலத்தில் இருந்து ஜயங்கொண்டம் நோக்கிச் சென்ற காா், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாமிக்கண்ணு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து ஜயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து திருக்கோவிலூா் சங்காபுரத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சாமிதுரை(59) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com