அரியலூா் மாவட்டம், வி.கைகாட்டி அடுத்த பெரிய திருக்கோணம் கிராமத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் த.ரத்னா கலந்து கொண்டு, மரக்கன்றை நட்டு வைத்து நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து பொதுமக்கள், தென்னை, வேம்பு, பூவரசு உள்ளிட்ட மரக்கன்றுகளை நட்டு வைத்தனா். நிகழ்ச்சிக்கு செல்வராஜ் தலைமை வகித்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் மாலா மற்றும் சாமிநாதன், நடராஜன், ரமேஷ், பாஸ்ா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.