தா.பழூரில்  மது விற்றவர் கைது

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம், தா.பழூரில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றவர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
தா.பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நீலத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜவேலு(48) என்பவர் மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com