அரியலூரில் அதிநவீன வசதியுடன் ஏ.எஸ். மருத்துவமனை திறப்பு

அரியலூர் பட்டுநூல் காரத் தெருவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட ஏ.எஸ். மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அரியலூர் பட்டுநூல் காரத் தெருவில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட ஏ.எஸ். மருத்துவமனை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
மருத்துவமனையை சுசீலாஅப்துல் சாதிக் மருத்துவமனையை திறந்து வைத்தார். அனிஸ்பாத்திமா ரோஸ்னா குத்துவிளக்கேற்றினார். ராஜன் கண் மருத்துவமனை மருத்துவர் ராஜா செரீப், எம்.எம். மருத்துமனை மதன்குமார், எஸ்.ஆர். மருத்துவமனை மருத்துவர் பிரவீன்,கோல்டன் மருத்துமனை மருத்துவமனை மருத்துவர் பொன்மணி, தொழிலதிபர்கள் ஜாபர்அலி,டில்லிராஜ்,சீதாராம் சுப்ரமணியன், தண்டபானி,இந்திய மருத்துவ சங்கத் தலைவர் எழில்நிலவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்மருத்துவமனையில் பொது அறுவைச் சிகிச்சை மற்றும் லேப்ராஸ்கோப்பிக் சிகிச்சை பிரிவு, இருதய நோய் சிகிச்சை பிரிவு,விபத்து மற்றும் அறுவைச் சிகிச்சை பிரிவு,எலும்பு முறிவு மற்றும் மூட்டு மாற்று சிகிச்சை பிரிவு,சிறுநீரகவியல் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட உயர்தர சிகிச்சைப் பிரிவுகள் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com