ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் விண்ணப்பிக்க செப்.30 ஆம் தேதி வரை கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறஇத்து மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புனிதப் பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் "கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-2020 என்று குறிப்பிட்டு ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005 என்ற முகவரிக்கு 30.09.2019-க்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிறுபான்மையினர் இயக்குநரகம், 044-28520033- என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.