அரியலூர் வட்டம் கீழையூர், உடையார்பாளையம் வட்டம் முத்துசேர்வாமடம், செந்துறை வட்டம் சிறுகளத்தூர் ஆண்டிமடம் வட்டம் அணிக்குதிச்சான் (தென்பாகம்) ஆகிய கிராமங்களில் பொது விநியோகம் திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் ரேசன் குறைதீர் கூட்டம் சனிக்கிழமை (செப்.14) காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளார்.