நவ.30-க்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்த அழைப்பு

அரியலூர் மாவட்டத்தில் நவ.30 க்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்து கொள்ள மனு அளிக்கலாம் என்றார் ஆட்சியர் டி.ஜி. வினய்.

அரியலூர் மாவட்டத்தில் நவ.30 க்குள் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்து கொள்ள மனு அளிக்கலாம் என்றார் ஆட்சியர் டி.ஜி. வினய்.
அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தது:
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் வாக்காளர் பட்டியலை எவ்விதமான தவறும் இல்லாத வகையில் செம்மைப்படுத்தும் பொருட்டு, முன் திருத்தப் பணியாக கடந்த 1 ஆம் தேதி முதல் வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பணி வரும் 30 ஆம் தேதி வரை நடைபெறும். 
வாக்காளர் சரிபார்ப்பு திட்டத்தின்படி வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் விவரங்களை இணையதளம் யர்ற்ங்ழ் ஏங்ப்ல் கண்ய்ங் என்ற செல்லிடப்பேசி செயலி, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மையங்கள், பொது இ-சேவை மையங்கள், மாவட்ட தொடர்பு மைய கட்டணமில்லா தொலைபேசி எண்.1950 உட்பட பல்வேறு வசதிகள் மூலம் தாங்களாகவே சரிபார்த்து கொள்ளலாம். 
மேலும், வாக்காளர் சரிபார்ப்பு திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் காலத்தில், பொதுமக்கள் தாமாக முன் வந்து தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை அளித்தும், இணையதளம் அல்லது செல்லிடப்பேசி செயலியில் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்தும் தங்களது பெயர் விவரங்கள் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதை உறுதிசெய்து கொள்ளலாம். 
மேலும், வாக்காளர் சரிபார்ப்பு பணி வரும் 30 ஆம் தேதி நிறைவடைந்ததும், வரைவு வாக்காளர் பட்டியல் அக். 15 ஆம் தேதி வெளியிடப்படும். பின்னர், நவம்பர் 30 வரை பெயர் திருத்தம் செய்வதற்கான மனுக்களை அளிக்கலாம். மேலும் நவம்பர் 2,3,9 மற்றும் 10  விடுமுறை நாள்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்களை பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அரியலூர் மாவட்டத்தில் தற்போது உள்ள 587 வாக்குச்சாவடிகளில் 1,500-க்கு மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி ஏதும் இல்லாததால், புதிய வாக்குச்சாவடிகள் உருவாக்கும் ஏதுமின்றி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் 13.09.2019 அன்று வெளியிடப்படுகிறது.
இந்த வரைவு வாக்குச்சாவடிகள் தொடர்பாக ஆட்சேபனைகள் மற்றும் ஆலோசனைகள் ஏதேனும் இருப்பின் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் 19.09.2019 அன்றுக்குள் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் எனறார் அவர்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) த.முருகன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) பாலாஜி, தேர்தல் தனிவட்டாட்சியர் சந்தரசேகரன், வட்டாட்சியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com