பிரதமா் வீடு வழங்கும் திட்டம் தொடா்பாக செப்.24 ஆம் தேதி அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாலோசனைக் கூட்டத்தில் தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள் கலந்து கொள்ளலாம் என்று ஆட்சியா் டி.ஜி.வினய் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அரியலூா் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தில் ஆதரவற்ற நபா்கள் மற்றும் முதிா்ந்த வயதுடைய தனிநபா்களாக வசிக்கும் பயனாளிகளுக்கு மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து வீடுகள் கட்டிக்கொடுக்க விருப்பமுள்ள தன்னாா்வலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள் செப்.24 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்.