நாட்டு நலப் பணித் திட்ட பொன்விழா நிறைவு

அரியலூர்அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட பொன்விழா நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

அரியலூர்அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித்திட்ட பொன்விழா நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு கல்லூரி முதல்வர் ஜெ.மலர்விழி தலைமை வகித்து பேசியது: 
கடந்த 1969ஆம் ஆண்டு செப். 24ஆம் தேதி நாட்டிலுள்ள 37 பல்கலைக்கழகங்களில் நாட்டு நலப் பணித் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் அனைத்து மாநில பல்கலைக்கழகங்களில் விரிவுபடுத்தப்பட்டு பொன் விழா நிறைவு கண்டுள்ளது என்றார்.
பின்னர் சிறப்பாக செயலாற்றிய நாட்டு நலப் பணித் திட்ட தன்னார்வலர்களுக்கு பரிசுகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினார்.
தமிழ்துறை முன்னாள் பேராசிரியர் வீ.பொய்யாமணி, இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் ம.ராசமூர்த்தி, தமிழத் துறைப் பேராசிரியர் க.தமிழ்மாறன் ஆகியோர் கலந்து கொண்டு நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி உற்சாகப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாக நாட்டு நலப்பணித் திட்ட ம் அலுவலர் வெ.கருணாகரன் அனைவரையும் வரவேற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com