வி.கைகாட்டியில் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
வட்டார வளர்ச்சி அலுவலர் கலையரசு, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வகீல், வட்டார மருத்துவ அலுவலர் அனிதா, சுகாதார ஆய்வாளர் ஜெகதீஸ்குமார், ஊராட்சி செயலர்கள் பாஸ்கர், முருகேசன், அசோக்குமார், ஜெய்சங்கர் ஆகியோர் கொண்ட குழுவினர் வி. கைகாட்டி நான்கு சாலை சந்திப்பு பகுதிகளிலுள்ள கடைகளில் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர். அப்போது, 40 கிலோ பாலித்தின் பைகள், கப்புகளை பறிமுதல் செய்த அலுவலர்கள், 10 கடைகளுக்கு மொத்தம் ரூ.8,000 அபராத தொகை விதித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com