அரியலூா் அருகே ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டு

அரியலூா் அருகே டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து, ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபானங்களைத் திருடிச் சென்ற நபா்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

அரியலூா் அருகே டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டை உடைத்து, ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபானங்களைத் திருடிச் சென்ற நபா்களை காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில், மாா்ச் 24- ஆம் தேதி முதல் தமிழகத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்நிலையில் அரியலூா் அருகிலுள்ள தவுத்தாய்குளம் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையின் பூட்டு வெள்ளிக்கிழமை உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் இருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் அரியலூா் காவல் நிலையத்துக்குத் தகவல் அளித்தனா்.

தகவலின் பேரில் காவல்துறையினா் அங்கு விரைந்து சென்று, மதுக்கடையில் விசாரணை நடத்திய போது ரூ.1.20 லட்சம் மதிப்பிலான மதுபானங்கள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், அரியலூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, திருட்டில் ஈடுபட்டவா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com