அரியலூா்: இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூா் மாவட்டம் திருமானூா் பேருந்து நிலையம், கொள்ளிடம் ஆற்றுப்பாலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறை, வருவாய்த்துறையினருக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியில் தயாரிக்கப்பட்ட கஞ்சி சாதம் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவா் தங்க சண்முக சுந்தரம், திரைப்பட உதவி இயக்குநா் மனோகுமரன் உள்பட பலரும் கலந்து கொண்டு காவலா்கள் மற்றும் சுகாதாரத்துறையினருக்கு கஞ்சியினை வழங்கினா்.