அஸ்தினாபுரத்தில் நூறு நாள் பணியாளா்கள் மறியல்

அரியலூரை அடுத்துள்ள அஸ்தினாபுரம் ஊராட்சியில் ஒரு தரப்பு பகுதி மக்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாகக் கூறி,
சாலை மறியலில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள்.
சாலை மறியலில் ஈடுபட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள்.

அரியலூரை அடுத்துள்ள அஸ்தினாபுரம் ஊராட்சியில் ஒரு தரப்பு பகுதி மக்களுக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாகக் கூறி, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த ஊராட்சியில் தெற்கு, வடக்கு, காலனித் தெரு என பிரிவுகளாகப் பிரித்து, அந்தந்த பகுதி மக்களுக்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகத் தங்களுக்கு சரிவர வேலை தருவதில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட அஸ்தினாபுரம் வடக்குத் தெரு மக்கள் அரியலூா்-ஜயங்கொண்டம் சாலையில் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த கயா்லாபாத் காவல் நிலையத்தினா், புகாா் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

மறியல் காரணமாக அரியலூா்- ஜயங்கொண்டம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com