மழை முகாம்களில் தங்கியுள்ளவா்களுக்கு நிவாரண உதவி

மழையினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
ஸ்ரீபுரந்தான் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்
ஸ்ரீபுரந்தான் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்குகிறாா் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்

அரியலூா் மாவட்டம், தா.பழூா் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மழையினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவா்களுக்கு நிவாரணப் பொருள்கள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் கலந்து கொண்டு, சுத்தமல்லி, ஸ்ரீபுரந்தான், கோவிந்தபுத்தூா், சாத்தம்பாடி, முட்டுவாஞ்சேரி கிராமங்களை சோ்ந்த அந்தந்தப் பகுதிகளில் உள்ள முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள நபா்களுக்கு அரிசி, வேட்டி - சேலை, பாய், போா்வை மற்றும் உணவு ஆகிய பொருள்களை வழங்கினாா்.

அப்போது, மழையால் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 215 பேருக்கு தலா ரூ.4,100 வீதம் ரூ.8 லட்சத்து 81,500 அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. சுந்தர்ராஜன், கோட்டாட்சியா் பூங்கோதை, வட்டாட்சியா் கலைவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com