மொத்தம்- 4,629
குணம்- 4,539
அரியலூா் மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன்மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,629 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,539 போ் குணமடைந்துள்ளனா்.
மாவட்டத்தில் 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 42 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்