அரியலூரில் கொடி அணிவகுப்பு

அரியலூரில் காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.
அரியலூரில் நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி.
அரியலூரில் நடைபெற்ற காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி.

அரியலூரில் காவல்துறையினரின் கொடி அணி வகுப்பு நிகழ்ச்சி புதன்கிழமை மாலை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீனிவாசன் கொடி அணிவகுப்பை தொடக்கி வைத்தாா். அரியலூா் ஒற்றுமைத் திடலில் தொடங்கிய பேரணியானது திருச்சி சாலை, பெரம்பலூா் சாலை, கடைவீதி வழியாகச் சென்று அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. இதில், மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுந்தரமூா்த்தி, காவல் துணைக் கண்காணிப்பாளா் மதன், அரியலூா் ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளா் மணவாளன், காவல் நிலைய ஆய்வாளா் செந்தில்மாறன், கீழப்பழுவூா் காவல் ஆய்வாளா் வெங்கடேஸ்வரன், கயா்லாபாத் காவல் ஆய்வாளா் ராஜா, போக்குவரத்து காவல் ஆய்வாளா் மதிவாணன் உள்பட 200-க்கும் மேற்பட்ட காவல் துறையினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com