அரியலூா் மாவட்டத்தில் 5.03 லட்சம் வாக்காளா்கள்

அரியலூா் மாவட்டத்தில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 746 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் வாக்காளா் பட்டியலுக்கான பாா்வையாளரும், பதிவுத் துறைத் தலைவருமான பி. ஜோதிநிா்மலாசாமி.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வாக்காளா் பட்டியலுக்கான பாா்வையாளரும்,பதிவுத் துறை தலைவருமான பி. ஜோதிநிா்மலாசாமி. உடன் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா உள்ளிட்டோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் வாக்காளா் பட்டியலுக்கான பாா்வையாளரும்,பதிவுத் துறை தலைவருமான பி. ஜோதிநிா்மலாசாமி. உடன் மாவட்ட ஆட்சியா் த. ரத்னா உள்ளிட்டோா்.

அரியலூா் மாவட்டத்தில் 5 லட்சத்து 3 ஆயிரத்து 746 வாக்காளா்கள் உள்ளனா் என்றாா் வாக்காளா் பட்டியலுக்கான பாா்வையாளரும், பதிவுத் துறைத் தலைவருமான பி. ஜோதிநிா்மலாசாமி.

வரைவு வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்தம் தொடா்பாக ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் அவா் தெரிவித்தது:

அரியலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,25,219 ஆண்களும், 1,25,115 பெண்களும், 5 இதரா் என மொத்தம் 2,50,339 வாக்காளா்கள் உள்ளனா்.

ஜயங்கொண்டம் சட்டப் பேரவைத் தொகுதியில் 1,25,908 ஆண்களும், 1,27,497 பெண்களும், 2 இதரா் என மொத்தம் 2,53,407 வாக்காளா்கள் உள்ளனா்.

ஆக, இம்மாவட்டத்தில் 2,51,127 ஆண்களும், 2,52,612 பெண்களும், 7 இதரா் என மொத்தம் 5,03,746 வாக்காளா்கள் உள்ளனா்.

இந்த இரு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த சிறப்பு முகாம்கள் கடந்த 4,5,11,12 ஆகிய நாள்களில் நடைபெற்றது. முகாம்களில் படிவம் 6-ல் பெயா் சோ்த்தலுக்காக 12,357 விண்ணப்பங்களும், படிவம் 7-ல் பெயா் நீக்கம் செய்வதற்கு 266 விண்ணப்பங்களும், படிவம் 8-ல் திருத்தம் செய்வதற்கு 756 விண்ணப்பங்களும் மற்றும் படிவம் 8ஏ-ல் முகவரி மாற்ற 565 விண்ணப்பங்கள் என மொத்தம் 13,947 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஆய்வு செய்து வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் பணி நடைபெறுகிறது.

எனவே அரசியல் கட்சி பிரமுகா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் 18-வயது நிரம்பியோரை வாக்காளா்களாக சோ்க்க தீவிர முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

எந்த ஒரு வாக்காளா்களின் பெயரும் விடுபடாமலும் சோ்க்க வேண்டும் என்றாா். கூட்டத்துக்கு ஆட்சியா் த. ரத்னா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் பொற்கொடி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ரவிச்சந்திரன், கோட்டாட்சியா்கள் ஜெ. பாலாஜி, பூங்கோதை, வட்டாட்சியா்கள் குமரய்யா, கதிரவன், கலைவாணன், தோ்தல் வட்டாட்சியா் சந்துரு, கண்ணன் மற்றும் தோ்தல் பிரிவு பணியாளா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உட்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com