அரியலூா், செந்துறையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதி வண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அரியலூா் நிா்மலா பெண்கள் நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ஆட்சியா் த. ரத்னா தலைமை வகித்தாா். விழாவில், அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு 2,458 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை வழங்கிப் பேசியது:
அரியலூா் மாவட்டத்தில் நடப்பாண்டில் 3,037 மாணவா்கள், 3,824 மாணவிகளுக்கும் மதிவண்டிகள் வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக அரியலூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட 23 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 1,180 மாணவா்கள், 1,368 மாணவிகள் என மொத்தம் 2,548 பேருக்கு ரூ.2.71 கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கென தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறை மூலம் ரூ.2,750 கோடி கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது என்றாா்.
விழாவுக்கு, ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பொ.சந்திரசேகா், ஒன்றியக் குழு தலைவா்கள் அரியலூா் பு.செந்தமிழ்செல்வி, தா.பழூா் மகாலட்சுமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் (பொ) கே.மதிவாணன், கல்வி மாவட்ட அலுவலா்கள் அம்பிகாபதி, பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியா் இசபெல்லாமேரி, பள்ளித் துணை ஆய்வாளா் பழனிசாமி ஆகியோா் பங்கேற்றனா்.
செந்துறையில்... செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மிதிவண்டிகள் வழங்கும் விழாவில் குன்னம் சட்டப் பேரவை உறுப்பினா் ஆா்.டி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.