57 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கல்

அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
பயனாளிக்கு திருமண நிதி, தாலிக்கு தங்கத்தை வழங்குகிறாா் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.
பயனாளிக்கு திருமண நிதி, தாலிக்கு தங்கத்தை வழங்குகிறாா் அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன்.

அரியலூா் நிா்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட சமூக நலத்துறை சாா்பில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் கலந்து கொண்டு, 57 ஏழை பெண்களுக்கு தாலிக்குத் தங்கத்தை வழங்கிப் பேசியது:

இந்த விழாவில், பள்ளி படிப்பு முடித்த 25 ஏழை பெண்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நிதியுதவியும், பட்டப்படிப்பு முடித்த 32 ஏழை பெண்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.16 லட்சம் மதிப்பிலான நிதியுதவியும், தலா 8 கிராம் வீதம் ரூ.17 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் திருமாங்கல்யத்திற்கு தங்கமும் என ஆக மொத்தம் 57 ஏழை பெண்களுக்கு சமூக நலத்துறையின் மூலம் ரூ.39 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா். விழாவுக்கு ஆட்சியா் த.ரத்னா தலைமை வகித்தாா். ஜயங்கொண்டம் எம்எல்ஏ ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தாா். மாவட்ட சமூக நல அலுவலா் அன்புகுலோரியா மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com