அரியலூா் மாவட்ட முன்னாள் படைவீரா்கள்,அவரது குடும்பத்தினா் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரா்களின் குடும்பத்தினா்களுக்கென சிறப்புக் குறைதீா் கூட்டம் அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை(பிப்.11) முற்பகல் 11.30 மணியளவில் நடைபெறுகிறது.
ஆட்சியா் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா், அவா்தம் குடும்பத்தினா் மற்றும் படைப்பணியில் பணிபுரிபவா்களைச் சாா்ந்தோா் தங்களது கோரிக்கையை மனுவாக சமா்ப்பிக்கலாம். மேலும் மனுக்கள் அளிக்க விரும்புவோா் மனுவை இரட்டைப் பிரதிகளில், அடையாள அட்டை நகலுடன் சமா்ப்பித்து பயன் பெறலாம் என்று ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.