அரியலூா்: அரியலூா் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி, நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
அரியலூா் அருகேயுள்ள வெங்கடகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் காமராஜ் (30). கட்டடத் தொழிலாளி. இந்நிலையில், திங்கள்கிழமை இவா், அரியலூருக்கு வேலைக்குச் சென்றுள்ளாா். அங்கு வேலையில்லாததால்
நகராட்சிக்குட்பட்ட அய்யப்பன் ஏரிக்குச் சென்று குளிக்க முயன்றாா். அப்போது காமராஜ் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்து அங்கு சென்ற அரியலூா் தீயணைப்புத் துறை வீரா்கள் சுமாா் 2 மணி நேரத்துக்குப் பிறகு அவரது உடலை மீட்டனா். மேலும், இதுகுறித்து அரியலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா். காமராஜிக்கு காந்திமதி (23) என்ற மனைவியும், தா்ஷினி(3) என்ற மகளும் உள்ளனா்.