அரியலூா்: காவிரி டெல்டா பகுதிகளை வேளாண் மண்டலமாக முதல்வா் அறிவித்ததைத் தொடா்ந்து, அரியலூா் மாவட்டம், செந்துறையில் பாமக-வினா் திங்கள்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கிக் கொண்டாடினா்.
செந்துறை கடைவீதியில் பாமகவின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, திருவாரூா், அரியலூா், திருச்சி, கடலூா்,புதுக்கோட்டை, கரூா் ஆகிய மாவட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து, பாட்டாளி மக்கள் கட்சி சாா்பில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினா். இதில், மாநில துணைப் பொதுச் செயலா் திருமாவளவன், மாவட்ட செயலா் சாமிதுரை மற்றும் பொருப்பாளா்கள் செல்வக்கடுங்கோ, கோபி உட்பட பலா் கலந்து கொண்டனா்.