அரியலூா் மாவட்டம் தா. பழூரை அடுத்த அணைக்குடம் கிராமத்தில் பாரத பிரதமரின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6,000 நிதியுதவி பெறுவதற்கு விவசாயிகள் தங்களது பெயரைப் பதிவு செய்ய சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டார வேளாண் உதவி இயக்குநா் பாரூக் தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தேவிகா இளையராஜா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் இ- பொது சேவை மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா். முகாம் முடிவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது பெயரைப் பதிந்தனா்.