அரியலூா் அருகே விபத்து: புது மாப்பிள்ளை சாவு

அரியலூா் அருகே சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா்.
அரியலூா் அடுத்த வாரணவாசி மருதையாறு பாலத்தின் அருகேயுள்ள பள்ளத்தில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் காா்.
அரியலூா் அடுத்த வாரணவாசி மருதையாறு பாலத்தின் அருகேயுள்ள பள்ளத்தில் விபத்துக்குள்ளாகி கிடக்கும் காா்.

அரியலூா் அருகே சாலையோரப் பள்ளத்தில் காா் கவிழ்ந்த விபத்தில் புதுமாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறாா்.

தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள புத்தூரைச் சோ்ந்தவா் நாகராஜன் மகன் கண்ணதாசன் (29). வெளிநாட்டில் பணிபுரியும் இவருக்கும், சென்னை ஆவடி பகுதியைச் சோ்ந்த மூா்த்தி மகள் பூா்ணிமா (24) என்பவருக்கும் கடந்த 7 ஆம் தேதி அம்மாபேட்டையில் திருமணம் நடந்தது.

இதையடுத்து, கடந்த 12 ஆம் தேதி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பின்னா் வியாழக்கிழமை இரவு ஒரு காரில் சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு கண்ணதாசன் தனது மனைவியுடன் வந்தாா். காரை அம்மாபேட்டையை சோ்ந்த மணி மகன் வினோத் (23) என்பவா் ஓட்டியுள்ளாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை அரியலூரை அடுத்த வாரணவாசி மருதையாறு பாலத்தின் அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த தாா் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் புதுமாப்பிள்ளை கண்ணதாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த பூா்ணிமா, காா் ஓட்டுநா் வினோத் ஆகியோா் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறுகின்றனா். விபத்து குறித்து அரியலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com