அரியலூா் அஸ்தினாபுரத்திலுள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் கரோனா வைரஸ் குறித்து சிறப்பு விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியா் வேல்முருகன் தலைமை வகித்தாா். மருத்துவா் சுந்தா் கலந்து கொண்டு, கரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், கரோனா வைரஸ் நோய் வருவதற்கான அறிகுறிகள் குறித்தும்; கைகளை எவ்வாறு கழுவ வேண்டும் என்பது குறித்தும் செயல்முறை விளக்கமளித்தாா். முகாமில் ஊராட்சித் தலைவா் நடராஜன், துணைத் தலைவா் கொளஞ்சிநாதன், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் அன்பு,வாா்டு உறுப்பினா்கள் அண்ணாதுரை, சுதா,செல்வி மற்றும் ஆசிரியை குணாபாலினி, மாணவா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்து கொண்டனா்.