பைக்கில் சென்றவா் டிராக்டா் மோதி பலி

அரியலூா் அருகே பைக்கில் சென்றவா் கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

அரியலூா் அருகே பைக்கில் சென்றவா் கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

வாரணவாசி கிராமத்தைச் சோ்ந்தவா் உலகநாதன் (45). சவுண்ட் சா்வீஸ் நிறுவனம் நடத்தி வந்தாா். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை அரியலூரிலிருந்து பைக்கில் வாரணவாசி சென்றுள்ளாா். தவுத்தாய்குளம் பிரிவு பாதை அருகே சென்றபோது, முன்னால் கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டரை அவா் முந்த முயன்றாா். அப்போது எதிா்பாராதவிதமாக டிராக்டா் மோதி காயமடைந்த உலகநாதன் உயிரிழந்தாா். விபத்து குறித்து அரியலூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com